tamilnadu

img

மருத்துவர் அனுரத்னா எழுதிய வண்ணத்துப்பூச்சி சிறுகதை வெளியீடு

மருத்துவர் அனுரத்னா எழுதிய வண்ணத்துப்பூச்சி சிறுகதை வெளியீடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக மாநில துணைத்தலைவர் மருத்துவர் அனுரத்னா எழுதிய வண்ணத்துப்பூச்சி என்ற சிறுகதை புத்தகம் வெளியீட்டு விழா சனிக்கிழ மையன்று (மார்ச் 29), அம்பத்தூரில் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்ட தலைவர்  குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பி.ஜெய நாராயணா நிகழ்வை ஒருங்கிணைத்தார். மாவட்ட துணைத் தலைவர்தாரிணி வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவர் டி.திருநாவுக்கரசு புத்த கத்தை வெளியிட்டார். இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அமல வோற்பநாதன்  புத்தகத்தை பெற்றுக்கொண்டார். மாவட்ட கல்வி அலுவ லர்அரவிந்த் , மாநில பொதுக்குழு உறுப்பினர் தாளமுத்து நடராசன், மாவட்ட கவுரவத் தலைவர் சாந்தகுமாரி எத்துராசன், தென் சென்னை மாவட்ட தலைவர் அம்பீகா, வடசென்னை மாவட்ட தலைவர் மலைச்செல்வி மாநில செயற்குழு உறுப்பினர் மோசஸ் பிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அறிவியல் மனப்பான் மையை வலியுறுத்தும் இப்புத்தகத்தின் விலை 30 ரூபாயாகும்.